சிறு தொழில்களுக்காக வாட்சப் புதிய திட்டத்தை தொடங்கியுள்ளது.
வாட்சப் (Whatsapp) நிறுவனம் இந்தியாவில் சிறு தொழில்களுக்கு உதவுவதற்காக எஸ்எம்பி சாதி உட்சவ் (SMB Saathi Utsav) என்ற புதிய திட்டத்தை தொடங்கியுள்ளது. சிறு தொழில்கள் டிஜிட்டல்மயமாவதற்கும், டிஜிட்டல் தளங்களை பயன்படுத்துவதற்கும் இத்திட்டம் உதவும்.
ஜெய்ப்பூரில் உள்ள ஜோரி பஜார் மற்றும் பாப்பு பஜார் ஆகிய சந்தைகளில் சுமார் 500க்கும் மேற்பட்ட சிறு தொழில்கள் இயங்கி வருகின்றன. முதற்கட்டமாக இந்த பஜார்களில் உள்ள சிறு தொழில்களிடம் வாட்சப் தனது எஸ்எம்பி சாதி உட்சவ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் சிறு தொழில்கள் வாட்சப் தளம் வாயிலாக எப்படி விரிவுபடுத்துவது, வளர்ச்சி பெறுவது என்பது பற்றிய விழிப்புணர்வும், பயிற்சியும் வழங்க வாட்சப் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.