News

நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!

கனமழையின் காரணமாக சீர்காழியில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டத்தில் ஒரே நாளில் இடைவிடாது கொட்டி தீர்த்த கனமழையின் காரணமாக 30 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்தன. மேலும் சீர்காழி வட்டத்தில் பல கிராமங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில், கனமழை பெய்த காரணத்தினால் பள்ளிகளில் பம்ப்செட் மோட்டார் மூலம் மழை நீர் வெளியேற்றப்படுவதாலும், மாணவரின் நலனை கருத்தில் கொண்டும் சீர்காழி. தரங்கம்பாடி, வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கும் மட்டும் நாளை 15/11/2022 ஒரு நாள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் லலிதாஉத்தரவிட்டுள்ளார். மேலும், வழக்கம் போல மயிலாடுதுறை, குத்தாலம் வட்டங்களில் பள்ளிகள் இயங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக, சீர்காழியில் தமிழக முதலமைச்சர

Read More
ECONOMY

ஈரோடு: களைகட்டிய மாட்டு சந்தை.. அடேங்கப்பா விலை இவ்வளவா!

ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் சந்தையில் 90 சதவீதம் மாடுகள் விற்பனை. ஈரோடு கருங்கல்பாளையத்தில் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை மாட்டு சந்தை நடைபெறுவது வழக்கம். மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா, தெலங்கானா, கோவா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் இந்த மாட்டு சந்தைக்கு வருவது வழக்கம்.இதை போல் விவசாயிகள் மாடுகளை விற்பனைக்கு கொண்டு வருவார்கள். இன்று வழக்கம் போல் மாட்டு சந்தை கூடியது. 350 பசு மாடுகள், 150 எருமை மாடுகள், 50 வளர்ப்பு கன்றுகளை என மொத்தம் 550 மாடுகள் சந்தைக்கு வரத்தாகி இருந்தன. இது கடந்த வாரத்தை விட குறைவுதான். தற்போது பரவலாக மழை பெய்து வருவதால் மாடுகள் வரத்து குறைந்துள்ளது. எனினும் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்றது. பசு மாடுகள் 45 ஆயிரம் முதல் 60 ஆயிரம் ரூபாய் வரையிலும், எருமை மாடுகள் 45 ஆயிரம் ரூபாய் வரையிலும், வளர்ப்பு கன்றுகள் 15

Read More