ஆதார் கார்டு மூலமாக பெர்சனல் லோன் வாங்குவது எப்படி என்று இங்கே பார்க்கலாம்.
இந்தியர்கள் அனைவருக்குமே ஆதார் கார்டு என்பது மிக அவசியமான ஒன்றாகும். இது வெறும் அடையாள ஆவணம் மட்டுமல்ல; அரசின் நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கும் வங்கி மற்றும் பணம் தொடர்பான விஷயங்களுக்கும் ஆதார் கார்டு அவசியம். பான் கார்டு, ரேஷன் கார்டு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் ஆதார் கார்டை இணைப்பதை அரசு கட்டாயமாக்கியுள்ளது.
பொதுமக்கள் தங்களது அவசர பணத் தேவையைப் பூர்த்தி செய்துகொள்ள வங்கிக் கடன் வாங்க நினைப்பார்கள். அவர்களுக்கு தனிநபர் கடன் (பெர்சனல் லோன்) உதவியாக இருக்கும். இந்தியாவின் முன்னணி வங்கிகள் இப்போது லட்சக்கணக்கில் கடன் வழங்குகின்றன. ஆதார் கார்டை வைத்தே நீங்கள் கடன் வாங்க முடியும்.
கடன் வாங்க நினைப்பவர்களின் அடையாளம், தொழில், சம்பளம், கிரெடிட் ஸ்கோர் உள்ளிட்ட விவரங்களை வங்கிகளில் முதலில் சரிபார்க்கும். இது கேஒய்சி சரிபார்ப்பு ஆகும். இதற்கு ஆதார் கார்டு மிக மிக அவசியம். ஆதார் கார்டிலேயே பெயர், முகவரி உள்ளிட்ட விஷயங்கள் வந்துவிடுகின்றன.