இந்தியாவின் செமிகண்டக்டர் பயணத்தில் முக்கிய மைல்கல்லாக டாடா குழுமம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திட்டத்தைத் தமிழ்நாட்டுக்குக் கொண்டு வராமல் அசாம் மாநிலத்தில் அமைக்கும் முயற்சியில் களமிறங்கியுள்ளது.
ஆனால் ஜனவரி மாதம் தமிழ்நாட்டுக்கு அடுத்தாகக் குஜராத் மாநிலத்தில் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு நடந்தது, இதில் பேசிய டாடா சன்ஸ் சேர்மன் என் சந்திரசேகரன், செமிகண்டக்டர் தயாரிப்பு தொழிற்சாலையை Dholera-வில் அமைக்கக் குஜராத் மாநில அரசுடன் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளதாகத் தெரிவித்தார்.
இதற்கு மத்தியில் மத்திய அரசு தரப்பில் முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. அசாம் மாநிலத்தில் செமிகண்டக்டர் பேக்கேஜிங் ஆலைக்கான டாடா குழுமத்தின் திட்டம் மதிப்பீட்டில் இருப்பதாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கூறியுள்ளார்.
அசாமில் உள்ள கவுகாத்தி பல்கலைக்கழகத்தில் டிஜிட்டல் இந்தியா-வின் எதிர்காலத் திறன் உச்சி மாநாட்டில் பேசிய ராஜீவ் சந்திரசேகர், அசாமில் விரைவில் ரூ.25,000 கோடி மதிப்பிலான செமிகண்டக்டர் பேக்கேஜிங் ஆலை தொடங்க உள்ளது. அசாமில் செமிகண்டக்டர் அலை அமைப்பது குறித்த டாடா குழுமத்தின் விண்ணப்பம் தற்போது இது மதிப்பீடு செய்யப்பட உள்ளது எனத் தெரிவித்தார்.