Author Posts
ECONOMY

சிஎஸ்கே பேன்ஸ் கெத்தா காலரை தூக்கி விடுங்க.. கப் நமக்குதான்.. எதிரணியை புரட்டிப்போட.. இந்த 3 பேர் போதும்!

சிஎஸ்கே அணியில் இடம்பிடித்துள்ள ரவீந்திர ஜடேஜா, பென் ஸ்டோக்ஸ் மற்றும் மொயின் அலி உலகின் தலைசிறந்த ஆல்ரவுண்டர்கள் பட்டியலில் உள்ளனர். இவர்கள் 3 பேருமே இடது கை பேட்ஸ்மேன்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இன்னும் சில நாட்களில் அதாவது வரும் 31ம் தேதி கோலாகலமாக தொடங்க உள்ளது. இந்த முறை கோப்பையை கைப்பற்ற வேண்டும் என ஒவ்வொரு அணியும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றன. ஐபிஎல் அணிகளை பொறுத்தவரை மும்பை இந்தியன்ஸ், ஆர்சிபிக்கு அதிக ரசிகர்கள் பட்டாளம் உண்டு. இந்த அணிகளை தூக்கி சாப்பிடும்விதமாக தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதும் மிக அதிக ரசிகர்களை கொண்டதுதான் சிஎஸ்கே எனப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.ஐபிஎல் தொடர்இந்திய மக்களின் மனதில் எப்போதும் குடியிருக்கும் மகேந்திர சிங் தோனி சிஎஸ்கே கேப்டனாக இருப்பதுதான் இதற்கு காரணம்.

Read More
SPORT

“மெஸ்ஸி ஸ்பெயினுக்காக விளையாட விரும்பவில்லை, என் உயிரைக் காப்பாற்றினார்”

ஹ்யூகோ டோகாலி அர்ஜென்டினா தேசிய இளைஞர் அணியில் ஸ்ட்ரைக்கரின் முதல் பயிற்சியாளராக இருந்தார், மேலும் அவர் சர்வதேச தேர்வை மேற்கொண்டபோது அவரது நிம்மதியை மறைக்கவில்லை. அர்ஜென்டினா தேசிய அணியின் இளைஞர் நிலைகளில் லியோனல் மெஸ்ஸியின் முதல் பயிற்சியாளராக ஹ்யூகோ டோகாலி இருந்தார், மேலும் அவர் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தத் தேர்ந்தெடுத்தார் என்ற உண்மையை இப்போது அவரால் மறைக்க முடியாது, அந்த நேரத்தில், அவருக்கு ஏற்கனவே வரிசைக்கான அழைப்புகள் இருந்தன. ஸ்பெயின் வரை. "என்னை கிணற்றில் போட்டிருப்பார்கள் என்று நினைக்கிறேன். அவர்கள் எங்களிடமிருந்து ஒரு வீரரைத் திருடினால், ஜோஸ் [பெக்கர்மேன்] மற்றும் நான் இறந்துவிடுவேன். அவர் ஸ்பெயினுக்காக விளையாட விரும்பவில்லை, அவர் என் உயிரைக் காப்பாற்றினார்," என்று பயிற்சியாளர் ஒப்புக்கொண்டார். ரேடியோ அல்பிசெலெஸ்ட் ஃப்யூடூராக் உடனான நேர்காணல். "நாங்கள் 17 வயதுக்குட்பட்டோருக்

Read More
News

நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!

கனமழையின் காரணமாக சீர்காழியில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டத்தில் ஒரே நாளில் இடைவிடாது கொட்டி தீர்த்த கனமழையின் காரணமாக 30 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்தன. மேலும் சீர்காழி வட்டத்தில் பல கிராமங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில், கனமழை பெய்த காரணத்தினால் பள்ளிகளில் பம்ப்செட் மோட்டார் மூலம் மழை நீர் வெளியேற்றப்படுவதாலும், மாணவரின் நலனை கருத்தில் கொண்டும் சீர்காழி. தரங்கம்பாடி, வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கும் மட்டும் நாளை 15/11/2022 ஒரு நாள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் லலிதாஉத்தரவிட்டுள்ளார். மேலும், வழக்கம் போல மயிலாடுதுறை, குத்தாலம் வட்டங்களில் பள்ளிகள் இயங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக, சீர்காழியில் தமிழக முதலமைச்சர

Read More
ECONOMY

ஈரோடு: களைகட்டிய மாட்டு சந்தை.. அடேங்கப்பா விலை இவ்வளவா!

ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் சந்தையில் 90 சதவீதம் மாடுகள் விற்பனை. ஈரோடு கருங்கல்பாளையத்தில் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை மாட்டு சந்தை நடைபெறுவது வழக்கம். மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா, தெலங்கானா, கோவா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் இந்த மாட்டு சந்தைக்கு வருவது வழக்கம்.இதை போல் விவசாயிகள் மாடுகளை விற்பனைக்கு கொண்டு வருவார்கள். இன்று வழக்கம் போல் மாட்டு சந்தை கூடியது. 350 பசு மாடுகள், 150 எருமை மாடுகள், 50 வளர்ப்பு கன்றுகளை என மொத்தம் 550 மாடுகள் சந்தைக்கு வரத்தாகி இருந்தன. இது கடந்த வாரத்தை விட குறைவுதான். தற்போது பரவலாக மழை பெய்து வருவதால் மாடுகள் வரத்து குறைந்துள்ளது. எனினும் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்றது. பசு மாடுகள் 45 ஆயிரம் முதல் 60 ஆயிரம் ரூபாய் வரையிலும், எருமை மாடுகள் 45 ஆயிரம் ரூபாய் வரையிலும், வளர்ப்பு கன்றுகள் 15

Read More
News

கொரோனா தாக்கியவர்களுக்கு காசநோய் பரிசோதனை: மத்திய சுகாதார அமைச்சகம் பரிந்துரை

கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருப்பவர்களுக்கு காச நோய் சோதனையும், காச நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்பவர்களுக்கு கொரோனா பரிசோதனையும் செய்யுமாறு மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது. (மேலும்…)...

Read More